திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி
ADDED :4450 days ago
திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து,நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தனர்.முன்னதாக பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.