உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திர­வு­பதி அம்மன் கோவிலில் தீமிதி திரு­விழா

திர­வு­பதி அம்மன் கோவிலில் தீமிதி திரு­விழா

சொரக்­காய்­பேட்டை: திர­வு­பதி அம்மன் கோவில் தீமிதி திரு­விழா, கொடி­யேற்­றத்­துடன் துவங்­கி­யது. பள்­ளிப்­பட்டு அடுத்த, சொரக்­காய்­பேட்டை கிரா­மத்தில் உள்ள, திர­வு­பதி அம்மன் கோவிலில், இந்­தாண்டு, ஆவணி மாதம், தீமிதி திரு­விழா, கடந்த மாதம், 30ம் தேதி கொடி­யேற்­றத்­துடன் துவங்­கி­யது. இன்று செவ்­வாய்க்­கிழமை இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருக்­கல்­யாணம் நிகழ்ச்சி நடை­பெறும். தொடர்ச்­சி­யாக, வெள்­ளிக்­கி­ழமை அர்­ஜூனன் தபசு, இறுதி நாளான, 9ம் தேதி காலை பீமன் படு­க­ளத்தில், துரி­யோ­த­னனை வதம் செய்யும் நிகழ்ச்சி, தெருக்­கூத்து கலை­ஞர்­களால் நடத்­தப்­படும். அன்று இரவு, 7:00 மணிக்கு தீமிதி நிகழ்ச்­சியும் நடை­பெறும்.விழாவை முன்­னிட்டு தினமும் பகல், 2:00 மணி­ய­ளவில் மகா­பா­ரத சொற்­பொ­ழிவு மற்றும் இரவு, 10:00 மணி­ய­ளவில் தெருக்­கூத்து நிகழ்ச்­சியும் நடை­பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !