உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்­லிக்­குப்பம் கோவிலில் ஆடி திரு­விழா நிறைவு

நெல்­லிக்­குப்பம் கோவிலில் ஆடி திரு­விழா நிறைவு

திருப்­போரூர்: வேண்­ட­வ­ராசி அம்மன் கோவிலில், ஏழு வார ஆடித்­தி­ரு­விழா சிறப்பு பூஜை­க­ளுடன் நிறை­வ­டைந்­தது. நெல்­லிக்­குப்பம் வேண்­ட­வ­ராசி அம்மன் கோவிலில், ஆண்­டு­தோறும் ஆடி­மாதம், ஏழு வார விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது. அதன்­படி, இந்­தாண்டு விழா கடந்த ஜூலை மாதம் துவங்கி, நேற்று முன்­தினம் நிறை­வ­டைந்­தது. விழாவை முன்­னிட்டு, வாரந்­தோறும் அம்­ம­னுக்கு சிறப்பு அபி­ஷேகம், ஊரணி பொங்கல் வைத்தல் நடந்­தது. ஒரு வாரம் சமு­தாய விழா­வா­கவும், இரண்டாம் வாரம் பெரு­வி­ழாவும் நடத்­தப்­பட்­டது. நிறைவு நாளில், மூலவர் வேண்­ட­வ­ராசி அம்மன் வெள்ளி கவ­சத்­திலும், உற்­சவர் சிறப்பு அலங்­கா­ரத்­திலும் அருள்­பா­லித்தனர். அம்மன் புகழ் தமிழ் நாமா­வளி அர்ச்­ச­னையும் நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !