உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்­தீஸ்­வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷம்

அகத்­தீஸ்­வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷம்

திருத்­தணி: அகத்­தீஸ்­வரர் கோவிலில், நேற்று நடந்த சிறப்பு பிர­தோஷ விழாவில், 1000க்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்து கொண்டு வழி­பட்­டனர். திருத்­தணி அடுத்த, நாபளூர் கிரா­மத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்­தீஸ்­வரர் கோவில் உள்­ளது. இக்­கோ­விலில், நேற்று பிர­தோஷ விழா நடந்­தது. விழாவை முன்னிட்டு மதியம், மூல­வருக்கு சிறப்பு அபி­ஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பிர­தோஷ விழா நடந்­தது. பைரவர் மற்றும் நந்தி பக­வா­னுக்கு சிறப்பு பால், அபி­ஷேகம் நடை­பெற்­றன. தொடர்ந்து மிளகு வழி­பாடும், சிறப்பு அலங்­காரம் மற்றும் தீபா­ரா­த­னையும் நடந்­தது. பின்னர், வில்வ மரத்தில் காப்­புக்­கட்டி, பரி­காரம் செய்­யப்­பட்­டது. இதில் பெண்கள் குழந்தை பாக்­கியம் வேண்டி பைர­வ­ருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழி­பட்­டனர். திருத்­தணி, நாபளூர், குன்­னத்தூர், லட்சுமாபுரம், தாஸ்­ரெட்டி கண்­டிகை, ஆற்­கா­டு­குப்பம் மற்றும் அதை சுற்­றி­யுள்ள பகு­தி­களில் இருந்து 1000க்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்து கொண்டு வழி­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !