உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர­மேஸ்­வரர் கோவிலில் நாமா­வ­ளிகள் உச்­ச­ரிப்பு

பர­மேஸ்­வரர் கோவிலில் நாமா­வ­ளிகள் உச்­ச­ரிப்பு

திருப்­போரூர்: தண்­டலம், விகித பர­மேஸ்­வரர் கோவிலில், பிரதோஷ விழா நடந்­தது. திருப்­போரூர் அடுத்த, தண்­ட­லத்தில் விகித பர­மேஸ்­வரர் கோவில் உள்­ளது. இங்கு, மாதம் இருமுறை, பிர­தோஷ விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது. நேற்று முன்­தினம் மாலை, பிர­தோஷ விழா நடந்­தது. சவுந்­தி­ர­நா­யகி உடனுைற விகித பர­மேஸ்­வரர், ரிஷப வாக­னத்தில் பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். அபி­ஷே­கத்தின் போது, சிவ நாமா­வ­ளிகள் உச்­ச­ரித்­தனர். திருப்­போரூர் பிர­ண­வ­மலை கைலா­ச­நாதர் கோவில், தையூர் செங்­கண்­மா­லீஸ்­வரர் கோவில், காட்டூர் வைத்­தி­ய­நாத ஈஸ்­வரர் கோவில் ஆகி­ய­வற்­றிலும் பிர­தோஷ வழி­பாடு நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !