உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநா­யகர் சிலை­களை கண்­கா­ணிக்க இளை­ஞர்கள் சிறப்பு குழு

விநா­யகர் சிலை­களை கண்­கா­ணிக்க இளை­ஞர்கள் சிறப்பு குழு

சென்னை: மண­லியில் பிர­திஷ்டை செய்­யப்­பட்ட பிரமாண்ட விநாய­கர் சிலை­களை, 24 மணி­நே­ரமும் கண்காணிக்க, இளை­ஞர்கள் அடங்­கிய சிறப்பு குழுவை மணலி போலீசார் அமைத்­துள்­ளனர். மணலி போலீஸ் நிலை­யத்­திற்கு உட்­பட்ட, 16 இடங்­களில் ஆறு அடி முதல் ஒன்­பது அடி வரை விநா­யகர் சிலைகள், நேற்று முன்­தினம் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டன. அவற்றை கடலில் கரைக்கும் வரை பாது­காப்பு அளிக்­கவும், அசம்­பா­வி­தங்­களை தடுக்கும் வகையிலும், அந்தந்த பகுதி இளை­ஞர்கள் ஐந்து பேர் அடங்­கிய சிறப்புக்காணிப்பு குழுக்­களை மணலி போலீசார் அமைத்­துள்­ளனர். இந்த குழுக்­க­ளுக்கு, சிலைகள் அருகே அறி­முகம் இல்­லாத நபர்கள் நட­மாட்டம்; வீண் பிரச்னை ஏற்படு­வதை தடுக்க, உட­னுக்­குடன் தகவல் பரி­மாற்றம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !