மேலக்கால் காளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!
ADDED :4510 days ago
மேலக்கால்: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்சவத்தையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இக்கோயிலில் புரட்டாசி உற்சவம் மூன்று நாட்கள் நடந்தன. வைகை ஆற்றில் பூசாரி சக்தி கரகம் எடுத்து வர, பக்தர்கள் காப்புகட்டி, பொங்கல் வைத்தனர். பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று, வைகை ஆற்றில் கரைத்தனர்.