கொண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ஊத்துக்கோட்டை: சிவாலயங்களில், நேற்று நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு நந்தி மற்றும் வால்மிகீஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு அருகம்புல், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், தாராட்சி பரதீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. இதில் தாராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.