உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் காணிக்கை

மேல்மலையனூர் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் காணிக்கை

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் 31லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி , கடந்த 3ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், கடலூர் ஜோதி முன்னிலை வகித்தனர். இதில் 31 லட்சத்து 50 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கமும், 698 கிராம் தங்க நகையும், 222 கிராம் வெள்ளி நகையையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறங்காவலர் தலைவர் சரவணன், அறங் காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !