உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்திகள் தேர்வு!

சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்திகள் தேர்வு!

சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், நேற்று காலை தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களுக்கு, கார்த்திகை, 1ம் தேதியான, நவ.16ம் தேதி முதல், ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு, நேற்று காலை, சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், கோவிந்தன்நாயர், உறுப்பினர்கள், சபரிமலை சிறப்பு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "பந்தளம் அரண்மனையை சேர்ந்தவர்கள் தான், மேல்சாந்தி குலுக்கல் தேர்வு செய்ய வேண்டும் என, அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த, எல்.கே.ஜி., மாணவன், வியாஸ்வர்மா, சபரிமலை மேல்சாந்திக்கான துண்டு சீட்டுகளை எடுத்தார். எர்ணாகுளம், கோதமங்கலத்தை சேர்ந்த, பி.கே.நாராயணன் நம்பூதிரி, மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோவிலுக்கான தேர்வில், 3ம் வகுப்பு மாணவி, கவுதமி, துண்டு சீட்டுகளை எடுத்து, பி.எம். மனோஜ், மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த சில ஆண்டுகளாகவே, சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !