கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4429 days ago
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாத சுவாமி சன்னதி கொடி மரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு அன்று மாலை பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி போன்ற அபிஷேகம் நடந்தது. பின் பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் சுவாமி சன்னதி வெளி பிரகாரத்தில் மூன்று முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியார் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.