ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :4389 days ago
ஊட்டி: ஊட்டி முத்தொரை பாலாடா ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை கொண்டாடப்பட்டது. சித்தி செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, முருகனுக்கு அபிஷேக பூஜை, ஏழு ஹெத்தையம்மனுக்கு ஆரா தனை ஆகியவை நடந்தன. கன்னேரிமந்தனை சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பஜனை இன்னிசை நடந்தது. தஞ்சை அருளாளர் ஆனந்த சித்தர், சாந்திவனம் மடாலயம் சுந்தரசாமி ஆகியோரின் அருளுரை, ஊட்டி கணேஷமூர்த்தி, ஆரகுச்சியை சேர்ந்த பெள்ளன் ஆகியோரின் சொற்பொழிவு இடம் பெற்றது. மேற்கு நாடு சீமை போஜன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராமச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.