திருப்பரங்குன்றம் கோயிலில் தினம் 2 வேளை சண்முகார்ச்சனை!
ADDED :4397 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினம் இருவேளை சண்முகார்ச்சனை நடக்கிறது. கோயிலில் நவ. 3ல் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. அன்றிலிருந்து நவ, 9வரை காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கு ஆறு சிவாச்சார்யார்களால் சகஸரநாம அர்ச்சனை செய்வர். ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கும். சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், வடை படைக்கப்பட்ட பிரசாதமும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் எலுமிச்சம் பழ சாறு, பால், தேன், சர்க்கரை கலந்த தினை மாவு வழங்கப்படுகிறது.