ஷத் பண்டிகை: கங்கை கரையில் கோலாகலம்!
ADDED :4605 days ago
பாட்னா: பீகாரில் பிரபலமான ஷத் பூஜை நிறைவடைந்தது. இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஆர்க்யா வழிபாடு கோலகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, கங்கை கரையில் ஏராளமானோர் சூரிய உதயத்திற்கு முன் வழிபாடு நடத்தினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கங்கை கரையில் கூடி, சூரிய பகவானுக்கு படையலிட்டனர். கடந்த புதன் கிழமை துவங்கிய ஷத் பூஜை நிறைவடைந்தது.