உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காவிரியில் புனித நீராடினார்!

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காவிரியில் புனித நீராடினார்!

மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களை போக்க ஐப்பசிமாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புனிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமா க மயிலாடுதுறை விளங்கி வருகிறது. இத்தகைய பெருமை மிக்க துலா உற்ச வம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் ö காண்டாடப்படுகிறது. காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆண்டு தோ றும் ஐப்பசி மாத இறுதியில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் மயிலாடுதுறை வருகை புரிந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை 5.30 மணியளவில் காவிரிதுலாக் கட்டத் தில் புனித நீராடி வடகரையில் உள்ள மங்கள வினாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் கும்பகோணம் ஆடிட்டர் வெங்கடசுப்பன், சென்னை தொழிலதிபர் டெக்கான்மூர்த்தி, சங்கரா மெட்ரிக் பள்ளி ஆட்சிமன்றக்குழு தலைவர் குஞ் சிதபாதம், தாளாளர் வெங்கட்ராமன், சீதாராமன் உட்பட முக்கிய பிரமுகர்க ள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !