குழந்தைகள் மனதில் பக்தியை வளர்ப்பது எப்படி?
ADDED :4460 days ago
நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றவர்களின் கதைகளை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எளிமையாகச் சொல்ல வேண்டும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் பொழுது குழந்தைகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளை வழிபட்டால் நாமும் நன்றாகப் படித்து பெரிய மனிதராகலாம் என்பது போன்று அவர்களுக்குப் பிடித்த விஷயங்களாகச் சொல்லியும், பெரிய மனிதர்களின் வரலாற்றை உதாரணம் காட்டியும் வளர்க்க வேண்டும். முக்கியமாக கட்டாயப்படுத்தாமல் விட்டுப் பிடித்துப் பழக்க வேண்டும்.