உலகளந்தபெருமாள் கோவில் பூஜை நேரம் மாற்றம்!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தினசரி காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் நடை திறக்கப்படும். 8 மணிக்கு துவங்கி 9.15 மணிவரை மூலவருக்கு திருப்பாவை சாற்றுமறை சிறப்பு பூஜைகள் நடக்கும். அப்பொழுது பக்தர்கள் மூலஸ்தான சேவைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வரும் 17ம் தேதி (கார்த்திகை 1ம் தேதி) முதல் காலை 6.45 க்கு துவங்கி 8 மணி வரை பூஜைகள் நடக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் மூலஸ்தான தரிசனம் நிறுத்திவைக்கப்படுகிறது. 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிவரை பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்படும். 5.45 மணிக்கு அந்தி பூஜைக்காக மூலஸ்தான சேவை நிறுத்தப்பட்டு 7 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜைக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.