உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவருக்கு அஷ்டமி வழிபாடு

கால பைரவருக்கு அஷ்டமி வழிபாடு

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 7:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !