கடையம் கோயிலில் மகாதேவ அஷ்டமி விழா
ADDED :4347 days ago
ஆழ்வார்குறிச்சி: கடையம் கோயிலில் காலபைரவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. மகாதேவ அஷ்டமி வழிபாட்டில் கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் கும்ப ஜெபம், வேதபாராயணம், அதனை தொடர்ந்து விசேஷ அபிஷேகம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்ல், படைப்பு தீபாராதனை, சிறப்பு அர்ச்சனை மற்றும் தடியங்காய் விளக்கு வழிபாடும் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.