உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 95வது ஜெயந்தி விழா!

பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 95வது ஜெயந்தி விழா!

திருக்கோவிலூர்: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 95ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்று துவங்குகிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 95ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று காலை, 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம், 10:30 மணிக்கு, பக்தர்கள், பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, கயல்விழி ஜெய்கிருஷ்ணாவின் பரதம், 6:00 மணிக்கு, ஸ்ரீ ராம் பார்த்தசாரதி இசையமைத்து, பாடிய, "யோகி நாம அமிர்ததாரா "சிடியை ஸ்ரீமுரளீதர சுவாமிகள் வெளியிட, நீதிபதி, டி.எஸ்.அருணாசலம் பெற்றுக் கொள்கிறார். 6:15 மணிக்கு, ஸ்ரீமுரளீதர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். நாளை காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில், சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது. 11:00 மணிக்கு, விழா அரங்கில் பக்தர்கள் பஜனை, மாலை, 4:00 மணிக்கு, சென்னை சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், 6:00 மணிக்கு, இம்மானுவெல் குழுவினரின் சங்கீத நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:45 மணிக்கு, வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !