பிரித்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :4364 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரித்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாசலக் குருக்கள் தலைமையில் 5 குருக்கள் மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டினர். தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி பக்தர்கள் வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டினர். புடவைகள் சாற்றப்பட்டன. பிரித்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர் உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.