புறப்படும் போது அபசகுனம் கண்டால் பரிகாரம் உண்டா?
ADDED :4463 days ago
பலர் இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு மனம் பாதிக்கப்படுகிறார்கள். கெட்டது என்பதை அறிவுறுத்தும் நம் சாத்திரங்கள் அதற்குப் பரிகாரம் கூறாமல் இல்லை. முதலில் மனரீதியான பாதிப்பைப் போக்கவே பரிகாரம் கூறப்பட்டுள்ளன. இதற்கு இது பரிகாரம் என்று நம்பிக்கையுடன் செய்து விட்டு காரியத்தை தொடர்ந்தால் வெற்றி நமக்கு தான். பொதுவாகப் புறப்படும்போது, அபசகுனம் ஏற்பட்டால் சிறிது நேரம் உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுச் செல்வதே பரிகாரம்.