நினைத்தது நடக்கும் தேனாபிஷேகம்!
ADDED :4482 days ago
தருமபுரியி<லுள்ள 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயரை வேண்டி அவருக்குத் தேனாபிஷேகம் செய்தால், நாம் நினைத்த கோரிக்கை எளிதில் நிறைவேறும். தேனாபிஷேக காலத்தில் அனந்த பத்மநாப சுவாமி ஆவிர்பவித்துள்ள சாளக்கிராமத்தை ஆஞ்சநேயரின் தலையிலுள்ள சிறு பள்ளத்தில் வைத்து அபிஷேகம் செய்வர். தினமும் காலையில் இந்த அபிஷேகம் நடக்கும்போது ஹரிவாயு துதி பாடுவார்கள்.