உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திருவள்ளுவர் தினம்: இருவரி குறல் ஒரு வரி சிறப்பு!

இன்று திருவள்ளுவர் தினம்: இருவரி குறல் ஒரு வரி சிறப்பு!

* திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் தை முதல் நாள்.
* திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.
* திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
* திருக்குறளுக்கு பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
* திருக்குறளுக்கு 226 பேர் உரை எழுதியுள்ளனர்.
* திருக்குறளுக்கு 44 வேறு பெயர்கள் உள்ளன.
* திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.
* திருக்குறளின் சிறப்புப் பெயர்கள் உலகப்பொதுமறை, பொய்யில் புலவன் பொருளுரை.
* திருக்குறள் 106 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
* திருக்குறளை லத்தீனில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும் எழுதியுள்ளனர்.
* கன்னியாகுமரி- டில்லி விரைவு ரயிலின் பெயர் திருக்குறள் எக்ஸ்பிரஸ்.
* கன்னியாகுமரி கடலிலுள்ள திருவள்ளுவர் சிலையின், அதன் 133 அதிகாரத்தை குறிக்கும் வகையில் உயரம் 133 அடி உயரம் உள்ளது.
* திருநெல்வேலியிலுள்ள, ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் மேம்பாலம்.
* சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது வள்ளுவர் கோட்டம்.
* ரஷ்யாவிலுள்ள கிரெம்ளின் மாளிகை சுரங்க அறையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது.
* காந்தியடிகளுக்குதிருக்குறளை அறிமுகம் செய்தவர், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்.
* திருக்குறள் தொடர்பான தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
* நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் கிட்டு சிரோன்மணி.
* திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எழுதியவர் அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர்.
* வெண்பாபாணியில் பயனுள்ள செய்திகளைத் தருவதால், திருக்குறளை வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.
* திருக்குறள் முதன் முதலில் அச்சானது 1812ல்.
* திருக்குறளை முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.
* வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.
* வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று திருவள்ளுவரைப் பாராட்டியவர் பாரதிதாசன்.
* திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்று பால்களும், 133 அதிகாரங்களும் உள்ளன.
* திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன.
* திருக்குறளில் அதிகபட்சமாக நட்பு பற்றி 171 குறள்களும், இதையடுத்து கல்வி பற்றி 51 குறள்களும் உள்ளன.
* திருக்குறளில் இல்லாத எழுத்து ஒள.இல்லாத எண் ஒன்பது.
* திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்றே எழுதுகிறார்.
* திருக்குறளில் உயிருக்கும் மேலாக குறிப்பிடப்படுவது ஒழுக்கம்.
* திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போற்றுகிறார்.
* திருக்குறளைப் புகழ்ந்து பேசும் நூல் திருவள்ளுவ மாலை.
* திருவள்ளுவரை பொய்யில் புலவர் என போற்றுவர்.
* திருக்குறளை மக்களுக்கு முதலில் கற்றுக்கொடுத்தவர் வள்ளலார்.

உழைப்பால் விதியையே மாற்ற முடியும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்!

*தன்னை வணங்குபவர், வணங்காதவர் என்ற பாகுபாடு கடவுளுக்குக் கிடையாது. அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் இன்பமே உண்டாகும்.
*மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் மனிதன் அடக்கத்துடன் வாழவேண்டும். அவ்வாறு இல்லாமல் கர்வத்துடன் வாழ்பவன் துன்பம் அடைவது உறுதி.
*கற்ற கல்வியை ஒருவன் மறந்து விட்டாலும், மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒழுக்கத்தை மறந்து விட்டால் அதை ஒருநாளும் திரும்பப் பெற முடியாது.
*ஒழுக்கமே மனிதனுக்கு சிறப்பினை அளிப்பதால், அதனை உயிர் போல எண்ண வேண்டும்.
*சோர்வில்லாமல் ஆர்வத்துடன் உழைப்பவன் விதியைக் கூட மாற்றி அமைக்கும் வலிமையைப் பெறுவான்.
*அடக்கம் என்னும் பண்பு அனைவருக்கும் நன்மை அளிப்பதாகும். அதிலும் பணம் படைத்தவர்கள் அடக்கத்துடன் வாழ்ந்தால் உலகமே அவர்களைப் போற்றி வணங்கும்.
*உயிர்களைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரைக் கண்டால், எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும்.
*ஒழுக்கம் கொண்டவன், நல்ல சிந்தனையோடு இனிய சொற்களையே பேசுவான். மறந்தும் அவனால் கொடுஞ்சொற்களைப் பேச முடியாது.
*ஊருணியில் நிறைந்திருக்கும் நீர் மக்களின் தேவைக்கு பயன்படுவது போல, நல்லவர்களிடம் உள்ள பணம் எல்லாருக்குமே பயன் தரும்.
*கைமாறு கருதாமல் உலகம் செழிக்க மழை பெய்வது போல, நல்லவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வருவர்.
*தீயிலிட்ட பொன் ஒளிவீசிப் பிரகாசிப்பது போல, பொறுமையை கடைபிடிப்பவன் வாழ்வில் பெருமை பெறுவான்.
*தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதுமே தவவாழ்விற்குரிய தகுதிகள்.
*எந்த நன்றியைமறந்தவருக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், செய்த நன்றியை மறந்தவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது.
*தெய்வத்தை வழிபட்டு கூட, ஒரு செயல் நடக்காமல் போகலாம். ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன் ஒருநாள் கிடைத்தே தீரும்.
*தேவையான சமயத்தில் கேட்காமலே செய்யும் உதவிக்கு, வானமும், இந்த பூமியும் கூட ஈடு இணை கிடையாது.
*எதை வேண்டுமானாலும் மறந்து விடலாம். ஆனால், கஷ்டப்பட்ட நேரத்தில்ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறப்பது கூடாது.
*சொல்லில் இனிமையும், செயலில் பணிவும் இருந்து விட்டால், ஒருவனுக்கு வேறு எந்த நகையும் தேவைப்படாது. அழகு அவனிடம் எப்போதும் குடியிருக்கும்.
*வீட்டிற்கு வந்த விருந்தினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் பண்பு வேண்டும். அத்தகைய பண்பு இருப்பவனின் வயலில் விதை விதைக்காமலே, தானாக நெற்பயிர் செழித்து  வளர்ந்தோங்கும்.
*பெற்றோருக்கு பிள்ளை செய்யும் கடமை, இவன் தந்தை இவனை பிள்ளையாக பெற முற்பிறவியில் என்ன தவம் செய்தானோ? என்று பிறர் பேசும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

அன்பு கருணை பணிவு உள்ளவன் மனித வடிவில் தெய்வம்

*   ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அன்புதான். அன்பு இல்லாதவனின் உடம்பு, எலும்பும் தோலும் போர்த்திய சதைத் தொகுப்பே ஆகும்.
*   பிறருக்கு நல்ல பயனைக் கொடு. இனியசொல் பேசு. விரும்பத் தகுந்த சிறப்பைக் கொடு. இப்படி செய்தால், நன்மை செய்பவன்,
பெறுபவன் இருவருக்கும் நன்மையாக அமையும்.
*   ஒருவன் மற்றவரால் பெற்ற எந்த பயனை வேண்டுமானாலும் மறக்கலாம். அதிலிருந்து மீள வழி உண்டு. ஆனால் பிறர் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு பரிகாரமே கிடையாது.
*   ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான். எனவே, ஒழுக்கத்தை உயிரை விடச் சிறந்ததாக போற்ற வேண்டும்.
*   பூரண நற்குணம் உள்ளவன் என்ற பெருமை, ஒருவனை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
*   பொறாமை என்ற பாவம் செல்வத்தை அழித்து விடும். பல தீமைகளிலும் தள்ளி விடும்.
*   தர்மத்தை உணர்ந்தவர்களிடமும், பிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லாதவர்களிடமும் லட்சுமி கடாட்சம் தானாகவே வந்து சேரும்.
*   ஒரு சபையில் உள்ள பலருக்கும் கோபம் உண்டாகும்படி, பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
அவமானமும் அடைவான்.
*   மறந்தும், ஒருவருக்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. மீறி நினைத்தால், அப்போதே தர்ம தேவதை, கேடு நினைக்கிறவனுக்கு கேடுண்டாக்க நினைத்து விடுவாள்.
*   செல்வம் இல்லாதவன் இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. அதுபோல் உயிர்களிடம் இரக்கம் இல்லாதவன், மோட்ச உலகத்தில் வாழ்வு பெற முடியாது.
*   பிறருக்குச் சொந்தமான பொருளைத் திருட வேண்டுமென, மனதில் நினைப்பது கூட தீமையுண்டாக்கும்.
*   உடலின் வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்தலாம். ஆனால், உடலின் உட்புறமாகிய உள்ளத்தை,
உண்மைதான் தூய்மைப்படுத்தும்.
*   யாரிடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில், தீங்கு செய்யத் தூண்டுகின்ற மனோநாவம் கோபத்தினால்தான் உண்டாகிறது.
*   ஒருவர், பிறருக்குச் செய்யும் துன்பங்கள் எல்லாம், செய்தவரையே வந்து சேரும். அதனால், தமக்குத் துன்பம் வரக் கூடாது என்று விரும்புகிறவர்கள், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
*   புண்ணிய செயல் எதுவென்றால், உயிர்க்கொலை செய்யாதிருப்பது. கொலை செய்வது மற்ற எல்லாப் பாவங்களையும் உண்டாக்கும்.
*   துன்பமற்ற நிலை எதுஎன்றால், இந்த உலகில் பிறக்காமல் இருப்பது தான். பிறவா நிலை வேண்டுமானால், ஆசை அழிய வேண்டும்.
*   அழிவில்லாத செல்வம் கல்வி மட்டும் தான். மற்ற செல்வங்கள் ஒருவரிடம் தங்கியிருப்பதில்லை.

*உள்ளத்தை வசப்படுத்தினால் உலகமும் வசமாகும் - வாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !