புற்றடி மாரியம்மன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்!
ADDED :4305 days ago
சீர்காழி: புற்றடி மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 20 லட்சத்தில் உருவான புதிய தேருக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. ஐந்து நிலைகளில் உருவாகியுள்ள புதிய தேருக்கு நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து தேரில் கலசம் வைக்கப்பட்டு, மகாதீபாராதனை செய்து பக்தர்கள் முன்னிலையில் தேர் வெள்ளோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.