திருத்தணி முருகன் கோவிலில் நாளை மாசி பிரம்மோற்சவம்
ADDED :4268 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இந்தாண்டிற்கான, மாசி மாத பிரம்மோற்சவ விழா, நாளை (பிப்.5) கணபதி ஹோமத்துடன், துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு மலைக் கோவிலில் விநாயகர் திருவீதியுலா நடக்கிறது. மறுநாள் (6ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், இரவு, 7:30 மணிக்கு கேடய வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 13ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு குதிரை வாகனம் மற்றும் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை முதல், வரும், 16ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர் தினமும் காலை, இரவு ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகிறார்.