செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!
ADDED :4265 days ago
கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலின் வருஷாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும். பின்னர் 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து கோபுரம், விமானங்களுக்கு வருடாபிஷேகம் நடைபெறுகிறது.