உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; அனுப்பர்பாளையத்தில் கோலாகலம்

ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; அனுப்பர்பாளையத்தில் கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. லட்சுமி ேஹாமம், நவகிரஹ ேஹாமம் உள்ளிட்ட ேஹாம வழிபாடுகள் விமரிசையாக நடந்தன. அவிநாசி அருள்நந்தி தலைமையிலான சிவாச்சார்யர்கள், யாகசாலை பூஜைகளை நடத்தினர். கடந்த 4ம் தேதி மாலை முதல்கால வேள்வி பூஜை; 5ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை ஆகியன, வேதமந்திரங்கள் முழங்க நடந்தன. இன்று அதிகாலை, 7:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் மங்கள இசையுடன் துவங்கியது. மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நிறை வேள்வியை தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து புனிதநீர் நிரம்பிய கலசங்கள் புறப்பாடாகின. காலை, 9:00க்கு மேல், 10:15 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், கருப்பராயர் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, தச தரிசனம், தசதானம், மஹா அபி ேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று முதல், மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது.  விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர், திருப்பணி குழுவினர் மற்றும் 15 வேலம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !