உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி : செஞ்சி தாலுகா புதுப்பாளையத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜையும், 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனமும், 7 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசமும், 7.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், 4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், 6.40 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 7 மணிக்கு கடம் புறப்பாடும், 7.10 மணிக்கு ஸ்ரீசிவ சண்முக ஞானாச்சார்ய குரு சுவாமிகள் தலைமையிலும், செத்தவரை சிவ ஜோதி ஆசிரமம் மோன சித்தர் சுவாமிகள் முன்னிலையிலும் விமானம் மகா கும்பாபிஷேகமும், 7.30 மணிக்கு மூலவர் மகா கும்பபிஷேகமும், 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !