திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா துவக்கம்!
காரைக்கால்: திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியோற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த நளபுரநாயகி ஸமேத நளநாராயண பெருமாள் கோவிலின் நேற்று பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கிறது.பிரம்மோத்ஸவ விழா நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.இன்று காலை நித்திய பூஜை ஹோமம் திருமஞ்சனம்,மாலை நித்திய பூஜை ஹோமங்கள் பலிப்ரதானம் ஹம்ஸ வாஹனத்தில் நாச்சியார் திருக்கோலம் திருவீதி புறப்பாடு.25ம் தேதி சேஷ வாஹனத்தில் வைகுந்தநாதர் சேவை, 26ம் தேதி கருடசேவை, 27ம் தேதி திருத்தேர் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி,மாலை திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.