காரைக்காலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :4276 days ago
காரைக்கால்: காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.காரைக்கால் திருதெளிச்சேரி சுயம் வர தபஸ்வினி உடனமர் கோவில் பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பார்வதீஸ்வரர் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த 108 திருவிளக்கு பூஜையில், சுமங்கலிகள், கன்னிப்பெண்கள் ஆகியோர் தங்களுடைய குடும்ப நன்மைக்காக சிறப்புப் பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி, தனி அதிகாரி ஆசைதம்பி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.