தேவாலயங்களில் மார்ச் 5ல் சாம்பல் புதன் வழிபாடு!
ADDED :4408 days ago
கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை மார்ச் 5ல் சாம்பல் தினத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாள் முதல் தொடர்ந்து 40 நாள்கள் நோன்பு வாழ்வைக் கடைப்பிடிக்கின்றனர். சாம்பல் புதன் நாளில் அனைத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.