உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரோட்டத்திற்கு தயாராகும் திருப்பரங்குன்றம் தேர்

தேரோட்டத்திற்கு தயாராகும் திருப்பரங்குன்றம் தேர்

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றத்தில் மார்ச் 21ல் நடக்கும் தேரோட்டத்திற்காக, கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரில் மராமத்து பணிகள் துவங்கின.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 20ல் நடக்கிறது. மார்ச் 21ல் கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் மராமத்துப் பணிகள் நேற்று துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !