உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை சக்தி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

நாளை சக்தி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

கருங்கல் : புதுக்கடை அருகே உள்ள ஆனாம்பிகை நகர் சக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா  ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் தொடக்கமாக  கணபதிஹோமம்,புண்ணிய  கலசபூஜை,தீபாராதனை,சமயவகுப்பு  உள்ளிட்டவைகள் நடைபெறும். மாலை ஆன்மிக மாநாடு,அத்தாழ பூஜை  , தினமும் நிர்மல்யதரிசனம்,உஷபூஜை,அன்னதானம்,பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியாக 4 ஆம் திருநாள் கூட்டு பிரார்த்தனை 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 5 ஆம் நாள் அன்று தாலிப்பொலி ஊர்வலம் நடைபெறும். விழாவின் 9 ஆம் நாள் காலை பால்குட ஊர்வலம், பிற்பகலில் அம்மனுக்கு பால்,சந்தனம்,பன்னீர் ஆபிஷேகம் நடைபெறும். மாலையில் அம்மன் வீதி உலா வருதல், கும்பம் எடுத்துவருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !