நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4209 days ago
நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல் மாவட்டம் பலபட்டறை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பங்குனி அமாவாசையை முன்னிட்டு, அம்மன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.