சேத்துப்பட்டு மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேக விழா
ADDED :4258 days ago
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பேரூராட் சியில் உள்ள வெங்கடாஜலபதி தெருவில் புதியதாக கட்டிய தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்தது இதன் நிறைவு விழாவில் 108 சங்காபிஷேகம் செய்து தண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து வீதிஉலா நடந்தது. மாலையில் பரசு ராமன், முத்துவேலன் சம் பத்து ஆகியோர் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடந் தது.