உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஏப்.14ல் சித்திரைத் தேரோட்டம்
ADDED :4236 days ago
திருச்சி ; திருச்சி உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயில் சித்திரைப் பெருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் கேடயத்தில் வீதியுலா வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு, பூதவாகனத்தில் திருவீதியுலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வாகனங்களில் அம்மன் வீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப் 14-ல் தேரோட்டம் நடக்கிறது.