உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கப்பாடி கோவில் கும்பாபிஷேகம்

விளக்கப்பாடி கோவில் கும்பாபிஷேகம்

கம்மாபுரம்:  கம்மாபுரம் அடுத்த  விளக்கப்பாடி செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு  கடந்த  8-ம் தேதி மாலை  8:00 மணியளவில்  கணபதி, நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது.
÷ந்று முன்தினம்  (9-ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், திரவிய ஹோமம், காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 10:00 மணியளவில் அய்யனார், செல்லியம்மன் கோவில் விமானங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 10:45 மணிக்கு அய்யனார், செல்லியம்மன் மூலவர் சுவாமிகள், பரிவர்த்த சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் , மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !