திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :4232 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை தெய்வசிவகாமணி பட்டர்,செண்பக பட்டர், சுப்பிரமணிய பட்டர்,செந்தில் பட்டர் செய்திருந்தனர். இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.