வால்பாறை பங்குனி உத்திர திருவிழா: சுவாமி திருவிதி உலா!
ADDED :4231 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் 62ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியருடன் முருகன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கடவுள் வேடத்தில் கலைஞர்கள் வேடமிட்டு, நடனமாடினர். விழா விற்கான ஏற்பாடுகளை, முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.