சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4310 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் மழைவேண்டி, உலகநன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார் துவக்கினார். திருவிளக்குபூஜை குழு ராஜேஸ்வரி, பேச்சியம்மாள் முன்னிலையில் நுாற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனையை பூஜாரி கணேசன் செய்தார். ஏற்பாடுகளை ஊழியர்கள் சுந்தரம், தர்மராஜ் செய்திருந்தனர்.