வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தார் வழிபாடு
ADDED :4194 days ago
சீர்காழி : நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில்
காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வைத்தியநாதசுவாமியை குலதெய்வமாக வழிபடும் நகரத்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக வந்து வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமியை தரிசனம் செய்து திரும்புவது வழக்கம்.
இந்தாண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளத்தில் நீராடி வழிபட்டுச் சென்றனர்.