உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வன்னியபெருமாள் கோயில் தேர்த் திருவிழா

புதுச்சேரி வன்னியபெருமாள் கோயில் தேர்த் திருவிழா


புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இக்கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இந்திர விமானம், சூரிய பிரபை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அனுமன், யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.  தொடர்ச்சியாக சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் , திருவெண்ணெய்த்தாழி, மாலை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உத்ஸவம்  நேற்று காலை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேரில் சுவாமி, தாயார் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். பின்னர்  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !