அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா!
ADDED :4182 days ago
புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. உழவர்கரை நகராட்சி, சண்முகாபுரம், சோனியாகாந்தி நகரிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த 27ம் தேதி மாலை மயானக்கொள்ளை உற்சவமும், தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 6.00 மணியளவில் அம்மனுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.இரவு 12.00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.