உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை ஹேமாம்பூஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (28ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு சுப்ரபாரதம், 7:30 மணிக்கு பெருமாள், தாயாருக்கும், சயனநரசிம்மர் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 8:00 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள் திருவல்லிகேணி பார்த்தசாரதி அலங்காரத்திலும், 8:30 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 11:00 மணியளவில் மழை வேண்டி சிறப்பு பூஜையும், மதியம் 1:30 உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பும், மாலை 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. இரவு 9:30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !