உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி : மாரியம்மன் கோவில், ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். திருத்தணி அடுத்த, அருங்குளம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் ஜாத்திரை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை ஒட்டி, மாரியம்மன் கோவில் வளாகத்தில், காலை, 8:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட மாரியம்மன் மற்றும் பூ கரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு, 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !