உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களகிரியில் எழுந்தருளி ராமானுஜர் வீதி உலா!

மங்களகிரியில் எழுந்தருளி ராமானுஜர் வீதி உலா!

ஸ்ரீபெரும்புதூரில், ராமானுஜர் மங்களகிரியில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவத்தை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி, ராமானுஜர் உற்சவம் துவங்கியது. ராமானுஜர், நேற்று முன்தினம் மாலை 7:30 மணிக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மங்களகிரியில் எழுந்தருளினார். வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்தார். ஐந்தாம் நாள், உற்சவமான நேற்று காலை, 6:30 மணிக்கு, ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கோவிலில் இருந்து, புறப்பட்டு, தேரடி, காந்தி ரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு, வடபுஷ்கரணி தெரு வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !