பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி விழா
ADDED :4170 days ago
பொறையாறு: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரப்பாடி பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான அம்பாள் வீதியுலா , கோ பூஜை, சுமங்கலி பூஜை, ஊஞ்சல் அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை ஆகியவற்றை தொடர்ந்து அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு கொடி இறக்கும் வைபவம் நடைபெற்றது.