சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலில் அன்னதானம்
ADDED :4167 days ago
பெரம்பலூர்: சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துறைமங்கலம், கே.கே., நகரில் அமைந்துள்ள சிவசக்தி மகா மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா கடந்த, 9ம் தேதி இரவு, சுவாமி குடியழைத்தல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி மகா அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும், 11ம் தேதி கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும், திருக்கல்யாணம், பொங்கல், மாவிளக்கு, சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடந்தது. நேற்று மதியம், 12 மணி முதல், 4 மணி வரை, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மகா அபிஷேகமும், சந்தனாகப்பு அலங்காரமும், 13ம் தேதி மஞ்சள் நீராற்றுடன் விழா நிறைவு பெறுகிறது.