திருவள்ளூர் பெருமாள் கோயிலில் சித்திரை விழா நிறைவு
ADDED :4161 days ago
திருவள்ளூர், : திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோயிலில் சித்திரை மாத திருவிழா கடந்த 4--ம் தேதி தொடங்கியது. உற்சவர் தினந்தோறும் ஒரு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 10- நாள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்ணாடி பல்லக்கு, த்வஜ அவரோஹனம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. தொடர்ந்து மூன்று நாள்கள் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.